Connect with us

இந்தியா

இன்று நாடு தழுவிய பாரத் பந்த்: தமிழகத்தில் கடையடைப்பா?

Published

on

இன்று நாடு தழுவிய பாரத் பந்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே டெல்லியில் போராட்டம் தொடங்கி இதையடுத்து டெல்லியில் உள்ள பெரும்பாலான பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நாடு முழுவதும் பல மாநிலங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதால் அம்மாநிலத்தில் முழு கடையடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் பாரத் பந்த் போராட்டத்தை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பாரத் பந்த் நடைபெறும் இடங்களில் விலக்கு அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன

தமிழகத்தை பொருத்தவரை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனை அடுத்து திருவாரூர், கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆந்திராவை பொருத்தவரை நேற்று நள்ளிரவு முதலே அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பாரத் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி அவர்களும் பாரத் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பஞ்சாப் முழுவதும் கடையடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

பாரத் பந்த் போராட்டத்தில் அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் பங்கேற்று உள்ளதால் பெரும்பாலான வங்கிகள் என்று இயங்காது என கூறப்படுகிறது. ஒடிசாவை பொருத்தவரை அம்மாநிலத்தில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை அரசு பேருந்துகள் ஓடாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே பாரத் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன

மேலும் கர்நாடகா, தெலுங்கானா ஆகிய பகுதிகளிலும் பாரத் பந்த் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருவதால் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா18 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்19 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா19 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்19 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!