தமிழ்நாடு

இன்றும் விலை உயர்வு: சென்னையில் ரூ.102ஐ நெருங்கியது பெட்ரோல் விலை

Published

on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தநிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102ஐ நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் ரூபாய் 101.67 என விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை 24 காசுகள் உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.39 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை 102 ரூபாயை நெருங்கி உள்ளது என்பதும் டீசல் விலை 95 ரூபாயை நெருங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேலையின்றி, வருமானமின்றி இருக்கும் பொது மக்கள் தலையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை தொடர்ந்து உயர்த்தும் மத்திய அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version