தமிழ்நாடு

அதிர்ச்சி.. இன்று ஒரே நாளில் சென்னையில் 7 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் உறுதி!

Published

on

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் 7 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அப்படி சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 3 வயது சிறுமி, பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரைச் சேர்ந்த 3 வது சிறுமி, பிறந்த ஒரே நாள் ஆன குழந்தை, இரண்டு மாதம் ஆன குழந்தை, ஒன்றரை வயது குழந்தை, நெற்குன்றம் முனியப்பன் நகரை சேர்ந்த 3 வயது சிறுவன், விருகம் பாக்கம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் என 7 குழந்தைகளுக்குச் சென்னையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

Trending

Exit mobile version