கிரிக்கெட்

இன்று 4வது டி20 போட்டி: வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா?

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 3 போட்டிகளில் இந்தியா ஒரு வெற்றியும், இங்கிலாந்து இரண்டு வெற்றியும் பெற்றுள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த போட்டி இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் தொடரை இழந்து விடும் என்பதால் இந்திய அணி தீவிர கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 போட்டியை பொறுத்தவரை டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி தான் வெற்றி பெற்றுள்ளது என்பதால் இன்று விராத்கோஹ்லி டாஸ் வெல்ல வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் பேட்டிங்கை பொருத்த வரை கேஎல் ராகுல் கடந்த மூன்று போட்டிகளிலும் சொதப்பியுள்ளார். ரோகித் சர்மாவும் தனது முழு திறமையை இன்னும் காண்பிக்கவில்லை. ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி ஆகியோர் மட்டும் நம்பிக்கை தரும் பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் பந்துவீச்சில் இந்தியா இன்னும் பலவீனமாக இருப்பதாக தெரிகிறது. இதனை சரிக்கட்ட நடராஜன் இன்று களமிறக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version