தமிழ்நாடு

19 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை: எந்தெந்த மாவட்டங்கள்

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக இன்று 19 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் என்றும் 19 மாவட்டங்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலூர், நாகை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில மாவட்டங்களில் இருந்து பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் 26ஆம் தேதி ஆரம்பித்த வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version