தமிழ்நாடு

இன்று 17 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் அதன்படியே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு ஆகியவை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இன்று தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஏற்கனவே நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிகிறது.

குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்பதால் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அந்த பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version