தமிழ்நாடு
13 மாவட்டங்களில் இன்னும் சிறிது நேரத்தில் மழை: வானிலை ஆய்வு மையம்
சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரக்கூடிய அசானி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புயலானது படிப்படியாக ஆந்திர மாநிலகடற்கரையை நோக்கி நகர்ந்து அதன்பிறகு படிப்படியாக வலுவிழக்கக்கூடிய சூழல் உள்ளது.