தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!

Published

on

டிஎன்பிஎஸ்சி குறித்த போலியான அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ள வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்பு மட்டுமே உண்மையானது என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிகிறது

தேர்வாணையத்தின் அனைத்து அறிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தொகுதி 4க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை https://www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Trending

Exit mobile version