தமிழ்நாடு
டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2019ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்பதும் இதற்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது என்று தெரிந்ததே.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கலந்தாய்வு தேதி, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, நேரம் ஆகிய விபரங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் உள்ளதாகவும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பிதழ் தனியாக தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.