வேலைவாய்ப்பு

TNPSC குரூப் 4: காலிப்பணியிடங்கள் 8,932 ஆக உயர்வு – டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published

on

TNPSC குரூப் 4: காலிப்பணியிடங்கள் 8,932 ஆக உயர்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 8,932 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, கிராம நிர்வாக அதிகாரி, பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், வனக் காவலர், தட்டச்சர், மற்றும் பல்வேறு பதவிகளுக்கான இந்த குரூப் 4 தேர்வில், ஆரம்பத்தில் 6,244 காலியிடங்கள் நிரப்புவதற்காக ஜூன் 9, 2024 அன்று தேர்வு நடைபெற்றது. 15.8 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர்.

தற்போது கூடுதலாக 2,208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த காலியிடங்கள் 8,932 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தரப்பிலிருந்தும் காலியிடங்களை மேலும் உயர்த்த வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது, அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 

Poovizhi

Trending

Exit mobile version