தமிழ்நாடு

TNPSC குரூப் 1: முதன்மைத் தேர்வுத் தேதி அறிவிப்பு!

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தேதி சற்றுமுன் தேர்வாணைய அதிகாரிகள் அறிவித்துள்ளதை அடுத்து தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் அந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வில் 3800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-1 வரிசையில் வரும் 66 பணியிடங்களுக்கு 3800 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் அந்த 3800 பேருக்கும் முதன்மை தேர்வு விரைவில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு 2022ஆம் ஆண்டு மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடைந்து டிஎன்பிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 3800 பேர்களும் முதன்மை தேர்வுக்கு தயாராகும் படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

 

 

seithichurul

Trending

Exit mobile version