தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடிகள் நடந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை விட சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. சிபிஐ விசாரித்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளது என்பது உண்மை தெரியும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த சில மாதங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிரடியாக இது குறித்த உத்தரவை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இதில் உள்ள முழு உண்மையும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version