தமிழ்நாடு

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு?

Published

on

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகளை எடுக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதை செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் திங்கட்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.

அந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்படும். எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version