தமிழ்நாடு
ரேஷன் கடைகளில் ரூ,500-க்கு மளிகைப் பொருட்கள்… தமிழக அரசு அதிரடி!
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 500 ரூபாய்க்கு 10 வகை மளிகைப் பொருட்கள் வழங்கத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. மறுபக்கம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.
எனவே அரசே மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கக் காய்கறிகளை வீடு வீடாக 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.
தற்போது அதே போன்று 500 ரூபாய்க்கு மளிகை பொருட்களை ரேஷன் கடைகளில் விற்க முடிவு செய்துள்ளது. அதனால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உரிய விலைக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ரேஷன் கடைகளில் ரூ,500-க்கு விற்கப்படும் மளிகை பொருட்கள் பட்டியல்.
1) துவரம் பருப்பு
2) உளுத்தம் பருப்பு
3) கடலை மாவு
4) மிளகு
5) சீரகம்
6) கடுகு
7) வெந்தயம்
8) தோசை புளி
9) பொட்டுக் கடலை
10) நீட்டு மிளகாய்