தமிழ்நாடு
ஊரடங்கு உத்தரவு.. புதிய சேவையை அறிமுகம் செய்த தபால் துறை!
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு உத்தரவால், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ பொருட்களைக் கொண்டு செல்ல அஞ்சல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு தபால் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அஞ்சல் அலுவலகங்கள், இணையதளம் மூலம் இந்த சேவையை புக் செய்யலாம்.
அஞ்சல் அலுவலகம், தங்களது சரக்கு வாகனங்கள் மூலம் பாதுகாப்பாகப் பொருட்களைக் கொண்டு சென்று சேர்த்துவிடும்.