தமிழ்நாடு

2,500 ரூபாய் டோக்கன் ரெடி! இன்று முதல் எடப்பாடி அரசின் பொங்கல் பரிசு வாங்கலாம்!!

Published

on

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகையும், பரிசுப் பொருட்களும் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. கரும்பு, பச்சரிசி, வெல்லம் உள்ளிட்டவை பரிசுப் பொருட்களாகவும், அத்துடன் 2,500 ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது.

இந்தப் பொங்கல் பரிசுத்தொகை எப்போது கிடைக்கும் என்று மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், உணவுபொருள் வழங்கல் துறையின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, பொங்கல் சிறப்பு பரிசுக்கான டோக்கன் இன்று (டிச.26) முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரையில் வீடுவீடாக சென்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசும், பரிசுத்தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்படும், ஒரு கடையில் காலையில் 100 பேருக்கு, மதியத்திற்கு மேல் 100 பேருக்கு வழங்கப்படும் என்றும் ஜனவரி 13 ஆம் தேதி வரையில் பொங்கல் பரிசு விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version