தமிழ்நாடு
முழு ஊரடங்கு: தமிழக காவல்துறை, பொது மக்களுக்கு முக்கிய கோரிக்கை
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய முழு முடக்க உத்தரவை தமிழக அரசு அமல் செய்ய உள்ளது.
இந்த முழு முடக்கத்தின் போது, மதியம் 12 மணி வரை மட்டும் தான் மளிகை கடைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் திறந்திருக்கும், ஆன்லைன் வணிக தளங்கள் செயல்பட அனுமதியில்லை, அவசியத் தேவையுள்ள தனியார் நிறுவனங்கள் மட்டுமே செயல்படும், உரிய காரணங்களின்றி மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் தமிழக காவல் துறை, ‘நாளை முதல் துவங்கும் முழு ஊரடங்கானது சென்ற காலங்களில் விதித்த ஊரடங்கை விட சிறிய அளவில் மாறானது, எனவே பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்.
சமூக வளைத்தலங்களில் பரவி வரும் ஊரடங்கு சம்பந்தமான காவல்துறை அதிகாரிகளின் பழைய உத்தரவு விடியோ, ஆடியோக்களை நம்ப வேண்டாம்’ என கோரிக்கை வைத்துள்ளது.