தமிழ்நாடு
விஜய் ரசிகர்கள் 31 பேர் மீது வழக்குப்பதிவு!
நடப்பு அரசியலை மையமாக வைத்து உருவான சர்கார் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. இந்த படத்துக்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சர்கார் திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என நேரடியாகவே மிரட்டும் தொனியில் எச்சரிக்கை விடுக்கின்றனர் ஆளும் தரப்பினர். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் 31 பேர் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
திருவாரூரில் அனுமதியின்றி சர்கார் திரைப்படத்துக்கு பேனர் வைத்ததாக விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது திருவாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல் கரூரிலும் அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக விஜய் ரசிகரள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.