தமிழ்நாடு

இம்மாதம் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Published

on

Minister sengottaiyan

இம்மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் முதல்வர் பழனிசாமி தான் அது குறித்து முடிவெடுப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (டிச.11) பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பள்ளிகள் திறப்பு குறித்து பதிலளித்தார். அவர் கூறியதாவது, ‘இம்மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இல்லை. முதல்வர் தான் அது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

ஏனெனில், எதிர்கட்சியினர் சவால் விட்டுக்கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. ஆகவே, பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் அனைவர்களின் கருத்துகளை அறிந்து முதல்வர் பழனிசாமி தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவார்’  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இம்மாதம் முழுமையும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம், அதாவது ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version