Connect with us

தமிழ்நாடு

‘ஸ்டாலினுக்கு ரொம்ப நன்றிங்க..!’- அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘பகீர்’ பேச்சு

Published

on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் முன்னதாக, ‘தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழகத்துக்கும் வழி பிறக்கும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக ஆட்சி மலர்ந்திடும். கழக அரசு அமைந்ததும், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தினர் நலம்காக்க விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி உறுதி என்ற உவப்பான செய்தியுடன் எனது வாழ்த்தை உரித்தாக்குகிறேன். இருள் விலகி ஒளி பாயட்டும்.

தமிழர் திருநாளைத் தமிழ்நாடெங்கும் சமத்துவப் பொங்கல் விழாவாக கொண்டாடுவோம். மக்களின் இதயங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வின் விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டு வரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்’ என்று கூறினார்.

ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டத்தை சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘ஸ்டாலின் இப்போது அல்ல, 2016 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதல் ‘ஆட்சி மாற்றத்துக்கான காலம் வந்துவிட்டது’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். அவரும் பல ஆண்டுகளாக இதை சொல்லி வந்து தற்போது சலிப்படைந்து விட்டார். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள் எதிர்பார்ப்பது ஆட்சி மாற்றம் அல்ல. ஆட்சி தொடர வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.

ஆனால் ஸ்டாலினுக்குத் தனி விருப்பம் உள்ளது. அது என்றும் நிறைவேறாது. இப்போது கூட, தமிழக அரசு, ஏழை எளிய மாணவர்கள் பயன் பெறும் வேண்டும் என்ற வகையில், தினமும் 2 ஜிபி இலவச டேட்டா கொடுக்கப்படும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின், அந்த திட்டத்தில் குறை கண்டு பிடித்தார். தானும் செய்ய மாட்டேன். செய்பவர்களையும் குறை கூறுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். ஆனால், மக்கள் அவரின் நாடகங்களைத் தெளிவாக புரிந்து கொள்கிறார்கள். ஸ்டாலின் பேச பேச, அதிமுகவின் வாக்கு வங்கி தான் அதிகரிக்கும். எனவே ஸ்டாலின் தொடர்ந்து பேச வேண்டும். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று பேசியுள்ளார்.

 

 

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்5 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!