தமிழ்நாடு
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்ததை அடுத்து படிப்படியாக ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஓர் இரு நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கேரளா எல்லையோர மாவட்டங்கள், சென்னை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடனான ஊரடங்கு திங்கட்கிழமையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை அதிகரிப்பதா? தளர்வுகளை நீட்டிப்பதா குறித்து முக்கிய ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட உள்ளார்.
இதில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சென்னை, ஒவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பிற கேரள எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.