தமிழ்நாடு

வாக்குப்பதிவு அன்று விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தனியார் நிறுவனங்களும் அன்றைய தினம் தங்களது ஊழியர்களுக்கு வாக்கு அளிக்க ஏதுவாக விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு அன்று ஊழியர்களை கண்டிப்பாக வேலைக்கு வரச் சொல்ல கூடாது என்றும் அதே போல் அன்றைய தினம் விடுப்பு எடுத்த தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம் கூடாது என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அந்த உத்தரவில் கூறியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version