தமிழ்நாடு
424 தரைதள பேருந்துகளை வாங்கும் தமிழ்நாடு அரசு.. தரைதள பேருந்துகள் என்றால் என்ன?
தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் 424 தரைதள பேருந்துகளை வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது,
அதில் 224 தரைதள பேருந்துகள் சென்னையிலும், 100 தரைதள பேருந்துகள் மதுரையிலும் 100 தரைதள பேருந்துகளைக் கோயம்புத்தூரிலும் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அண்மையில் 1170 சாதாரண பேருந்துகளைத் தரைதளத்திலிருந்து 900 மிமீ உயரமுள்ள பேருந்துகளை வாங்குவதாக வெளியான அறிவிப்பை எதிர்த்து மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆர்வலர் வைஷனி ஜெயக்குமார் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
அதில் அரசு 400 மிமீ அல்லது 650 மிமீ தரை உயரம் கொண்ட பேருந்துகளை வாங்க வேண்டும் என்தை தான் சட்டம் அனுமதிக்கிறது. அரசு முழுமையாகத் தரைதளம் கொண்ட பேருந்துகளை வாங்க வேண்டும் என வாதாடப்பட்டது..
அதற்குப் பதில் அளிக்கும் படி தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் கேட்டு இருந்த நிலையில், விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு 424 தரைதள பேருந்துகளை வாங்க உள்ளதாகவும், அதில் 224 தரைதள பேருந்துகள் சென்னையிலும், 100 தரைதள பேருந்துகள் மதுரையிலும் 100 தரைதள பேருந்துகளைக் கோயம்புத்தூரிலும் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையாக 100% தரைதள பேருந்துகளை வாங்க முடியாது. அதற்கான சாலை கட்டுமான வசதிகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரைதளம் பேருந்து என்றால் என்ன?
தரைதளம் பேருந்து என்றால் குறைந்த உயரத்தில் பேருந்தில் கால் வைத்து ஏறக்கூடியதாக இருக்க வேண்டும். பேருந்துக்குள் கால் வைத்த பிறகு படிக்கட்டுகள் இருக்கக் கூடாது. பெரும்பாலும் மாநகர குளிர்சாதன பேருந்துகள் அவ்வாறு இருக்கும். தரைதள பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களால் எளிதாக ஏறி இறங்கக் கூடியதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.