தமிழ்நாடு

இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு: தமிழக அரசு தகவல்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ள நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கிற்கு இருக்கும் வாய்ப்பு என்ற தமிழக அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா இரண்டாவது அலையைத் சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version