Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ்: தமிழக அரசு தீவிரம்!

Published

on

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்த தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் அரசு முறை சுற்றுப்பயணங்களுக்காக ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் முதலமைச்சர் உள்ளிட்ட விஐபிகள் மேற்பார்வை இடுவதற்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2005 ஆண்டு தயாரிக்கப்பட்ட பெல் 412 இபி என்ற ரக ஹெலிகாப்டரை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வரும் நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் அந்த ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்த ஹெலிகாப்டர் பயன்பாட்டில் இல்லாததால் அவசர காலங்களில் அதனை பயன்படுத்த தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

குறிப்பாக இந்த ஹெலிகாப்டரை மருத்துவ வசதிகாக பயன்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி, ஏர் ஆம்புலன்ஸ் ஆக பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

14 பேர் வரை பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டர் 2005ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதும், இதுவரை 2,449 மணிநேரங்கள் மட்டுமே வானில் பறந்து உள்ளது என்றும், இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாற்றி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றுவதற்கு சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஹெலிகாப்டரை மருத்துவ காரணங்களுக்காக ஏர் ஆம்புலன்ஸ் மாற்றுவதன் சாத்தியக் கூறுகள் மற்றும் ஹெலிகாப்டரை இறக்கும் வசதிகள், மருத்துவமனைகளில் ஹெலிகாப்டர் இறக்குவதற்கான கட்டமைப்பு வசதிகள், அதற்கான செலவுகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் அவசரமான நோயாளிகள் இந்த ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஏற்கனவே இது போன்ற ஏர் ஆம்புலன்ஸ் வசதி கர்நாடக மாநிலத்தில் உள்ளது என்பதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக அவசரமாக வேறு மருத்துவனைக்கு மாற்றுவதற்கு இந்த ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகத்திலும் விரைவில் இந்த ஹெலிகாப்டர்களை ஏர் ஆம்புலன்ஸ் ஆக பயன்படுத்தும் முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!