தமிழ்நாடு
சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!
சிலம்பம் விளையாடும் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என தமிழக அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் சிலம்பம் வீரர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது
தமிழகத்தில் மாநில அளவில் விளையாடும் சிலம்பம் வீரர்கள் மற்றும் தேசிய அளவில் தங்கள் திறமையைக் காட்டிய சிலம்பம் வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என சற்று முன்னர் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சிலம்பம் விளையாட்டு வீரர்கள் தமிழக அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே சட்டப்பேரவையில் கொள்கை விளக்க குறிப்பில் சிலம்பம் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது அரசு ஆணையாக வெளியிடப்பட்டுள்ளதால் சிலம்பம் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது