தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க முடிவு!

Published

on

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலமாக, பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் பொது, கார்டை ஸ்கான் செய்தால் மட்டும் போதும் என்பதால் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

மேலும் விரைவில் நாடு முழுவதும் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வருகிறது. அப்போது ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ரேஷன் கார்டை ஸ்கான் செய்த பிறகு அட்டைக்கு சொந்தமான ஒருவரின் கைரேகை வைத்த பிறகு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்ற முறை அறிமுகம் தமிழகத்தில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகத் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டும் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் போது பயோமெட்ரிக் முறை கட்டாயமாக்கப்படும்.

ரேஷன் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்பட்டால், ரேஷன் கார்டுகளை அடகு வைக்கும் முறையும் குறையும் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version