செய்திகள்
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500…அபராதத்தை உயர்த்திய தமிழக அரசு……
உலகம் முழுவதும் கொரோனா 3வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் ஓமிக்ரான் வைரஸ் என மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே, இதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் கொரொனா வேகமாக பரவி வருகிறது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,47, 417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கியது. எனவே, தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரம், பலரும் முகக்கவசம் அணியாமல் ஊரை சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், பொதுஇடங்களிலில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதம் ரூ.200 ஆக இருந்த நிலையில், அதை ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.