Connect with us

தமிழ்நாடு

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு: தமிழக அரசு உத்தரவு

Published

on

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையவழியாக புகார் முறையும் நடைமுறையில் இருக்கும் என அறிவிப்பு. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு உணவு மற்றும்‌ நுகர்பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ 08.07.2021 அன்று திருவள்ளூரில்‌ நடத்திய ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள்‌ . நியாயவிலைக்‌ கடைகள்‌ தொடர்பான புகார்களை இணையவழியில்‌ தெரிவிக்கப்‌ பல்வேறு சிரமங்கள்‌ உள்ளதால்‌, அந்தந்தக்‌ கடைகளில்‌ நேரடியாக எழுத்து மூலம்‌ தெரிவிக்கும்‌ வகையில்‌ ஒவ்வொரு கடையிலும்‌: புகார்ப்‌ பதிவேடு வைக்க வேண்டும்‌ என்று கேட்டுகொண்டார்கள்‌.

இதனால்‌ புகாரை உடனடியாக தெரிவிக்கவும்‌ அதன்‌ மீது தொடர்புடைய அலுவலர்கள்‌ உடனுக்குடன்‌ நடவடிக்கை எடுக்கவும்‌ முடியும்‌ என்றும்‌ கூறினார்கள்‌. இதன்‌ முழுப்பரிமாணத்தையும்‌ ஆய்ந்து ஏற்கனவே நடைமுறையில்‌ இருக்கும்‌ இணைய வழியில்‌ புகார்‌ தெரிவிக்கும்‌ நடைமுறையுடன்‌ ஒவ்வொரு நியாயவிலைக்‌ கடைகளிலும்‌ புகார்ப்‌ பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்‌ என்று முடிவு செய்யப்பட்டது.

இதனை உடனடியாக அமல்படுத்த ஆணையாளர்‌, உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை கேட்டுக்கொள்ளப்படுகிறார்‌. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அரசின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இனி நுகர்வோர்கள் ரேசன் கடை குறித்த புகார்களை அந்தந்த கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் புகார் பதிவேட்டிலேயே பதிவு செய்யலாம் என்பதும், புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோதிடம்4 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்15 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்26 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்39 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்50 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்60 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!