தமிழ்நாடு
சாதிச் சான்றிதழ் பெறும் விதிகளைத் தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சாதிச் சான்றிதழ் பெறும் விதிகளில் உள்ள சிக்கலைக் குறைக்க, ஒரு நபரின் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் ஏற்கனவே ஆய்வுக் குழுவால் சரிபார்க்கப்பட்டிருந்தால், சமூகச் சான்றிதழ் மறுக்கப்படக்கூடாது” என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் 8 வாரங்களுக்குள் சமூக சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான கையேட்டை மாநில அரசு கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சான்றிதழைப் பெறுவதில் உள்ள சிக்கலை எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் உதவும்.