தமிழ்நாடு
சனிக்கிழமைகளில் பள்ளிகள் விடுமுறையா? தமிழக அரசு பரிசீலனை!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக ஆசிரியர்களின் கோரிக்கையை அடுத்து சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழகத்தில் 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்த மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வழக்கம்போல் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பள்ளிகள் தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்பட்டு வரும் நிலையில் சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், சனிக்கிழமை விடுமுறை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.