தமிழ்நாடு
கொரோனா நிவாரண நிதி ரூ.2000 டோக்கன் எப்படி இருக்கும்?
![2000 Rs - Bhoomitoday இந்திய ஊழியர்கள், வருவாய், மாதம், அறிக்கை, Indian Employees, Earnings, Rs 10000, Month, Report](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/2000-Rs.jpg)
கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000 பெறுவதற்கான டோக்கன் எப்படி இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தைப் புரட்டிப்போட்டு வருகிறது. புதிதாக முதல்வர் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதியான 4 ஆயிரம் ரூபாயில் ரூ.2000-ஐ மக்களுக்கு அளிப்பதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து மே 10-ம் தேதி கொரோனா நிவாரண நிதியாக 2 ஆயிரம் ரூபாய் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். தொடர்ந்து நாடு முழுவதும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த கொரோனா நிவாரண நிதி பெறுவதற்கான டோக்கன் எப்படி இருக்கும் என்று வெளியிடப்பட்டுள்ளது. அது சென்ற முறை அதிமுக அரசு வழங்கிய டோக்க போன்று இல்லாமல், எந்த ஒரு கட்சி அடையாளமும் இல்லாமல், தமிழ்நாடு அரசு முத்திரையுடன் விநியோகிக்கப்பட உள்ளது.
டோக்கன் கீழ் “நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம், தொற்றிலிருந்து தமிழகத்தை மீட்போம் – மாண்பு மிகு தமிழக முதலமைச்சர்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நிவாரண நிதி மற்றும் ரேஷன் பொருட்கள், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தினம் 200 பேருக்கு மட்டும் வழங்கப்படும்.