தமிழ்நாடு

செப்.1ல் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தபடி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் ஆன்லைன்ல வகுப்பு நடத்தலாம் என்று முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்ததாக செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து கேரளாவை ஒட்டிய மாநிலங்கள் தவிர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் திட்டமிட்டபடி 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதேநேரத்தில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version