தமிழ்நாடு

இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்கள் ரூ.80 வரை உயர்வு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!

Published

on

இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்கள் ரூபாய் 80 வரை உயர்ந்து உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டாஸ்மாக் மதுபானங்கள் விரைவில் உயரும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்கள் விலை 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்வு என அறிவித்துள்ளது. இதனால் குடிமகன்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

இன்று முதல் ரூபாய் 10 முதல் 80 வரை டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்ந்து உள்ளதை அடுத்து தமிழ்நாடு அரசுக்கு தினமும் 10.35 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10 விலை உயர்வு என்றும், மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40, புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version