செய்திகள்
1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது எப்போது? – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை பொறுத்தவரை ஏற்கனவே 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி விட்டன.
இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காலை முதல் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய ஆலோசனையின் போது அக்டோபர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பது மற்றும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.
முடிவில், நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், மாணவ, மாணவிகள் தங்களின் சொந்த விருப்பத்தில் பள்ளிக்கு வரலாம். கட்டாயம் எதுவும் கிடையாது என அரசு அறிவித்துள்ளது. அதோடு, கொரோனா வழிபாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.