தமிழ்நாடு
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ.10,000.. தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு!
![bus_accident_2_650(2) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/bus_accident_2_6502.jpg)
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்களுக்கு 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்த் திரைப்படங்களில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உதவினால் அதனால் பல பிரச்சனைகள் தங்களுக்கு ஏற்படும் என்பது போன்ற காட்சிகள் சமீப காலமாகக் குறைந்துள்ளது.
மேலும் இது போன்று விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களைக் காவல் நிலையம், நீதிமன்றம் என அலைக்கழிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்களுக்கு 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் நபர்களுக்கு மத்திய அரசு நிதியிலிருந்து 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது.
இப்போது அதில் மாநில அரசும் 5000 சேர்த்து 10000 ரூபாயாக வழங்கப்படும் என தமிழ்நாடு சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.