தமிழ்நாடு

ஜூன் 23 முதல் அனுமதி; மகிழ்ச்சியான செய்தி அறிவித்த தமிழக அரசு!

Published

on

ஜூன் 23 முதல் சென்னை காவல் எல்லை தவிர, பிற தமிழகப் பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மே 25 முதல் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்திலிருந்து தமிழகத்தில் ஆட்டோ போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. விமான சேவைக்கு அனுமதி அளிக்கும் போது ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதி வேண்டும்.

இல்லை என்றால், ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த அட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று வியாழக்கிழமை ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் போராட்டம் நடத்தினர்.

அதை அடுத்து வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோ சேவை வழங்கலாம். ஆனால் ஆட்டோவில் ஒரு பயணியை மட்டுமே அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

ஓட்டுநர்கள் மாஸ்க் அணிந்து மட்டுமே ஆட்டோ ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் சானடைசர் போன்றவற்றை ஓட்டுநர்கள் ஆட்டோவில் வைத்து இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

Trending

Exit mobile version