தமிழ்நாடு

24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் இருபத்தி நான்கு மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு நாடு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் வணிக வளாகங்கள், திரையரங்குகள், ஹோட்டல்கள் திறப்பதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி அளித்திருந்த நிலையில் அந்த நடைமுறையை அமல்படுத்த முடியாத வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட நீங்கி இயல்பு நிலை திரும்பியதை அடுத்து தற்போது மீண்டும் இருபத்தி நான்கு மணி நேரமும் கடைகள் திறக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே இருபத்தி நான்கு மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த நடைமுறை ஜூன் 5ஆம் தேதி முறை அமலில் இருக்கும் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறைம் பெண் ஊழியர்களை இரவில் பணியமர்த்த கூடாது உள்பட ஒரு சில நிபந்தனைகளும் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version