தமிழ்நாடு

டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி..!

Published

on

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று வந்ததை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல உள்ளதாக இது முக்கியமான பயணமாகப் பார்க்கப்படுகிறது.

டெல்லி செல்லும் ஆளுநர் அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும் பல்வேறு மசோதாக்களைக் கிடப்பில் போட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

உள்துறை அமைச்சருடனான இந்த சந்திப்பில் இதற்கெல்லாம் முடிவு எடுக்கப்படுமா? நீட் மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version