இந்தியா
7 பேர் விடுதலை: தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு அவசர கடிதம்
சென்னை: பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை ஆலோசனையின் முடிவில் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சரியாக ஒருவாரம் கழித்து ஆளுநர் இதில் இன்று மிக முக்கிய முடிவு எடுத்துள்ளார்.
பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.