தமிழ்நாடு
ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் சிறை: ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு என்பதால் இன்றும் நாளையும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மிக அதிகமான கூட்டம் இருப்பதால் பொதுமக்கள் பணத்தையும் பொருட்படுத்தாது ஆம்னி பேருந்துகளில் செல்ல முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அதிக கூட்டம் வருவதை கணக்கில்கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இஷ்டத்திற்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதுகுறித்த புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.