தமிழ்நாடு
10 மணிக்குள் வேலைக்கு வர வேண்டும்; அரசு ஊழியர்களுக்கு குட்டு வைத்த தமிழக அரசு!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தினமும் காலை 10 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
2019 ஜூன் 17-ம் தேதியன்று வெளியிடப்பட்ட இந்தச் சுற்றறிக்கையில், “அரசாங்கத்தின் அனைத்து செயலாளர்களும் தங்கள் அலுவலகத்திற்கு 10 மணிக்குள் சரியான நேரத்திற்கு வர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விதிகள் அனைத்து அலுவலக தலைமை அதிகாரிகள் மற்றும் பிற அலுவலர்களுக்கும் பொருந்தும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே ஜூன் மாதம் அரசு உழியர்களின் உடை கட்டுப்பாடுகள் குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தொடர்ந்து இந்த வேலை நேரம் குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதாக வருவதாக வரும் புகாரை அடுத்தே தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று செய்தி சுருள் தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.