தமிழ்நாடு
ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, பொய் பேசுவதற்கான டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி சாடியுள்ளார்.
நாமக்கலில் நேற்று முதல்வர் பழனிசாமி அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ‘திமுக என்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. ஸ்டாலின் அதன் தலைவர். அவரது குடும்ப உறுப்பினர்களே பதவிக்கு வருவார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும். நில அபகரிப்பு, சொத்து சுரண்டல், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் என அனைத்தும் மேலோங்கும். நீங்கள் கடை போட்டால் உடனே மாமூல் வாங்க வந்து விடுவார்கள். இதுவே தான் திமுக.
ஆனால், அதிமுக ஆட்சியில் அப்படியான எந்த நிலைமையும் இல்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கொரோனோ காலத்தில் அதிமுக அரசு தமிழக மக்களுக்கு பேருதவி ஆற்றியது. தற்போது ஸ்டாலினைத் தொடர்ந்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பதவிக்கு வருகிறார். பின்பு அவரது பேனும் பதவிக்கு வருவார். அது குடும்ப ஆட்சி. இதை சொன்னால் ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வெறும் பொய்யாக மட்டுமே பேசி மக்களை கவர முயற்சி செய்கிறார். பொய் பேசுவதில் டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டுமெனில், அது ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும்’ இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.