தமிழ்நாடு

தமிழக மக்களுக்கு வளமான வாழ்வை வழங்கட்டும் புத்தாண்டு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Published

on

தமிழக மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக இந்த புத்தாண்டு மலரட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசின் மக்கள் நலத்திட்டங்களால் தாய்த்தமிழ் உறவுகள் சிறப்புற பயனடைந்து, அனைத்து துறைகளிலும் முதலிடம் பெறும் வளமும் ஆற்றலும் மிக்க தமிழகத்தை மென்மேலும் வெற்றிநடைபோடும் தமிழகமாக தொடர்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version