தமிழ்நாடு
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் பழனிசாமி: ஆனால்….
![edappadi palanisamy - Bhoomitoday edappadi palanisamy](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/2-5.jpg)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகவும் ஆனாலும் வீட்டில் அவர் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்று குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதல்வருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து ஹெர்னியா எனும் குடலிறக்க அறுவை சிகிச்சை அவருக்கு வெற்றிகரமாக செய்யப்பட்டதாகவும் சிகிச்சைக்குப் பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து இன்று அவர் சற்று முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஒரு சில நாட்கள் அவர் வீட்டில் இருந்து ஓய்வு எடுப்பார் என்றும் அதன்பின் அவர் தனது அலுவல்களை கவனிப்பார் என்றும் முதல்வர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.