தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மே 2-ம் தேதி கூடும் அமைச்சரவை கூட்டம்!

Published

on

மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு நீப்பு முடிவுக்கு வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் நீட்டிப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க மே2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிபுணர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அமைச்சரவை கூட்டம் மே 2-ம் தேதி சனிக்கிழமை கூடி விவாதிக்க உள்ளது.

இந்த கூட்டத்தில் மே 3-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கைத் தளர்த்தலாம் என்று முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்களுடன் விவாதிப்பதற்கு முன்பாக மருத்துவக் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவாதிப்பார் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version