தமிழ்நாடு
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மே 2-ம் தேதி கூடும் அமைச்சரவை கூட்டம்!
![TN Cabinet Meet - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/04/TN-Cabinet-Meet.jpg)
மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு நீப்பு முடிவுக்கு வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் நீட்டிப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க மே2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிபுணர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அமைச்சரவை கூட்டம் மே 2-ம் தேதி சனிக்கிழமை கூடி விவாதிக்க உள்ளது.
இந்த கூட்டத்தில் மே 3-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கைத் தளர்த்தலாம் என்று முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்களுடன் விவாதிப்பதற்கு முன்பாக மருத்துவக் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவாதிப்பார் என்றும் கூறப்படுகிறது.