தமிழ்நாடு

கிராம மக்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சூப்பர் திட்டங்கள்!

Published

on

கிராமத்தில் வசிக்கும் மக்களுக்குத் தரமான குடிநீர், வீடு இல்லாதவர்கள் வீடு என பல்வேறு முக்கிய திட்டங்களை இன்றைய பட்ஜெட்டில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

மாநிலத்திலுள்ள அனைத்து 79,395 குக்கிராமங்களுக்கு ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். 1.27 வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வசதிகள் செய்து தரப்படும்.

தற்போது குடிநீர் இணைப்பு இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கும் 2024-ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள்ளாகக் குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க வழிவகை செய்யப்படும். இதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஜல் ஜீவன் இயக்கம் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரூ.8,014.41 கோடி செலவில் புதிதாக 2,89,877 வீடுகள் கட்டப்படும். கிராமப்புறங்களில் தற்போது வீடு இல்லாத 8,03,924 குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். தற்போதுள்ள மேற்கூரைக்கான செலவான 50 ஆயிரம் ரூபாயுடன், கூடுதலாக 70 ஆயிரம் ரூபாய் எஅன் மொத்தம் 2.76 லட்சம் ரூபாய் அரசு மானியமாக வழங்கப்படும்.

விரைவில் குறைந்த விலையில் நவீனத் தொழில்நுட்பங்களுடன் வீடு கட்ட அரசு வழிவகை செய்யும். 2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தில், 3,548 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி நடப்பு ஆண்டிலிருந்து ஒரு தொகுதிக்கு 3 கோடி ரூபாய் மீண்டும் அளிக்கப்படும்.

ரூ.1200 கோடி ரூபாய் செலவில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தொடங்கப்படும். இத்திட்டம் குக்கிராம அளவில் நிலவும் அடிப்படை உட்கட்டமைப்பிற்கான இடைவெளிகளை நிறைவு செய்வதை உறுதி செய்யும்.

மறைந்த முதல்வர் கலைஞர் அறிமுகப்படுத்திய மிகப் பெரிய புகழ்பெற்ற திட்டம் நமக்கு நாமே. இத்திட்டம் உள்ளூர் சமுகங்களுடன் இணைந்து உள்ளூரின் முக்கியமான பணிகளை மேற்கொள்ள மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். 2021-2022-ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

36,218 மகளிர் சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் 809.79 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் புதுப்பிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும்.

நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் 5,500 கோடி ரூபாய் சிறப்பு கோவிட் கடன் உட்பட 10 ஆயிரம் கோடி ரூபாய்க் கடன் உறுதி செய்யப்படும்.

Trending

Exit mobile version