வேலைவாய்ப்பு

நாளை திருப்பத்தூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்களுக்கு வாய்ப்பு!

Published

on

Tirupathur Job Fair 2024: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவருகிறது. அதன்படி, நாளை (18.10.2024) திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கியமான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த சிறப்பான வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: இந்த வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, தகுதிகேற்ற வேலைவாய்ப்புகளை வழங்க இருக்கின்றன. முகாம் 18.10.2024 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

முகாமில் கலந்துகொள்ள தகுதிகள்: இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டம் மற்றும் டிப்ளமோ வரை படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். ITI, பொறியியல் பட்டதாரிகளும் இம்முகாமில் கலந்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் கல்வி சான்றிதழ்களின் நகல்கள், சுயவிவரங்கள் மற்றும் புகைப்படம் உடன் கொண்டு வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் தொடர்பு கொள்ளலாம் (தொலைபேசி எண்: 04179 – 222033).

 

Poovizhi

Trending

Exit mobile version