இந்தியா

திருப்பதி கோவிலில் பிப்ரவரி மாத தரிசனம்: டிக்கெட்டுக்கள் கிடைப்பது எப்போது?

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் பிப்ரவரி மாதம் பிறக்க உள்ளதை அடுத்து பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் ’திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட் சிறப்பு அனுமதி டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் சர்வ தரிசன டோக்கன் நாளை வெளியாகும் என தெரிவித்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளொன்றுக்கு 20 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இலவச தரிசனத்திற்காக ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணி முதல் ஆன்லைனில் கிடைக்கும் என்றும் தேவையானவர்கள் ஆன்லைன் மூலம் இலவச டிக்கெட் மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் பிப்ரவரி மாத இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கும் என்ற தேவஸ்தானத்தின் அறிவிப்பு ஏழுமலையான் பக்தர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version